ஓம் நமச்சிவாய. வணக்கம். என் இனிய சகோதர சகோதரிகளே, எல்லாம் வல்ல இறைவனின் கிருபையால் நான் உங்களை இந்த இணையத்தளத்தில் சந்திக்கின்றேன். என் இனிய நண்பர்களே, வேண்டாம். குடும்பத்தினரே என்றே அழைக்கின்றேன். ஏன் என்ற கேள்வியா? நீங்களும் நானும் ஒரே உலக மக்களாக, ஒரு நாட்டினராக, ஒரே இனத்தவராக, ஒரே சமயமாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம். ஆகையால், தொடர்பு ஒன்று இருப்பின் அது உறவையே குறித்து நிற்கின்றது. ஆதலால், உங்களை என் குடும்பத்தினரே என்றே அழைக்கின்றேன். இந்த இணையத்தளத்தில் என்னால் இயன்ற பல விவரங்களை/ விடயங்களை உங்களுக்குத் தர ஆவல் கொள்கிறேன். அவ்வாறு என்னுடய இந்த தளத்தில் நீங்களும் எழுத விருப்பம் கொண்டீர்கள் என்றால், தாரளாமாக எழுதலாம், எந்த தயக்கமும் வேண்டாம். கேள்விகள் இருப்பின் கேட்பீர்களாக..!!!
நன்றி,
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க